Header Logo

பல்சுவை
90 வயது மூதாட்டி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்

Mar 8, 2026 - 07:55 PM -

0

90 வயது மூதாட்டி கூட்டு பாலியல் துஷ்பிரயோகம்

மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 90 வயது மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார். 

கடந்த மார்ச் 6 நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி வயல் வேலையை முடித்து விட்டு வீட்டில் தனியாக அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த 4 பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே திடீரென நுழைந்துள்ளனர். 

தனியாக இருந்த மூதாட்டியை அவர்கள் 4 பேரும் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் மூதாட்டியை கட்டிலுடன் கிணற்றில் வீச முயன்ற போது மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் குற்றவாளிகள் தப்பி ஓடிவிட்டனர். 

பலத்த காயமடைந்த மூதாட்டி உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வயது முதிர்வு காரணமாக அவரது நிலைமை தற்போது மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். 

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள பொலிஸார், குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர். 

இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

title