Mar 9, 2026 - 01:03 PM -
0
வீடொன்றில் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த பெற்றோலை கல்முனை தலைமையக பொலிஸார் மீட்டுள்ளனர்.
கல்முனை - புறநகர் பகுதியில் வர்த்தக நிலையம் ஒன்றுடன் இணைந்த வீடொன்றில் பெற்றோல் பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக கல்முனை பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, இவ்வாறு பெற்றோல் மீட்கப்பட்டுள்ளது.
இதன் போது 32 லீட்டர் பெற்றோல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் 39 வயதுடைய பெண் ஒருவர் கைதான நிலையில் பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.
--
