Header Logo

வணிகம்
செலான் வங்கி 2025ஆம் ஆண்டில் உயர்ந்த வரிக்குப் பின்னரான இலாபமாக (PAT) ரூ.12.1 பில்லியனை பதிவு செய்துள்ளது

Mar 11, 2026 - 01:16 PM -

0

செலான் வங்கி 2025ஆம் ஆண்டில் உயர்ந்த வரிக்குப் பின்னரான இலாபமாக (PAT) ரூ.12.1 பில்லியனை பதிவு செய்துள்ளது

• வருமான வரிக்கு முன்னரான இலாபம் - ரூ.19.6 பில்லியன் 22.3%ஆல் அதிகரிப்பு
• வரிக்குப் பின்னரான இலாபம் - ரூ.12.1 பில்லியன் 20.5%ஆல் அதிகரிப்பு
• மொத்த சொத்துக்கள் ரூ.921 பில்லியன், 18% வளர்ச்சியுடன்
• உரிமையாண்மை மீதான வருவாய் (ROE) 15.89%
• மொத்த மூலதன போதுமான விகிதம் 17.89%
• மதிப்பிறக்க கட்டணங்கள் (நிலை 3) விகிதம் 1.03% 

டிசம்பர் 31, 2025 அன்று முடிவடைந்த ஆண்டுக்கான செலான் வங்கியின் நிதிப் பெறுபேறுகள் இலாபத்தில் வலுவான வளர்ச்சியை வெளிப்படுத்தின. வங்கி வரிக்கு முன்னரான இலாபமாக (PBT) ரூ.19.6 பில்லியனை பதிவு செய்தது. இது முன்னைய நிதியாண்டில் பதிவான ரூ.16.0 பில்லியனுடன் ஒப்பிடும்போது 22.3% அதிகரிப்பை காட்டியது. மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில், வரிக்குப் பின்னரான இலாபம் (PAT) ரூ.12.1 பில்லியனாக இருந்தது. இது 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் பதிவு செய்யப்பட்ட ரூ.10.0 பில்லியனை விட 20.5% வளர்ச்சியாகும். இவ் வரிக்குப் பின்னரான இலாபம், வங்கியின் 37 ஆண்டு வரலாற்றில் அடையப்பட்ட உயர்ந்த வருடாந்த இலாபத்தைக் குறிக்கிறது. இது நிலையான வளர்ச்சியையும் நிதி செயல்திறனையும் வெளிப்படுத்துகிறது. 

நிதி செயல்திறன் அறிக்கை 

2024ஆம் ஆண்டில் ரூ.36.7 பில்லியனாக இருந்த நிகர வட்டி வருமானம் 2025ஆம் ஆண்டில் ரூ.38.3 பில்லியனாக அதிகரித்தது. இது 4.21% வளர்ச்சியை பிரதிபலித்தது. இது கடன் புத்தகத்தில் ஏற்பட்ட வளர்ச்சி, சந்தை வட்டி வீதங்களில் ஏற்பட்ட குறைவு மற்றும் கடன்கள், வைப்புத்தொகைகள் மற்றும் அரசு பத்திரங்களை மறுமதிப்பீடு செய்ததன் காரணமாக ஏற்பட்டது. வங்கியின் நிகர வட்டி மிகை (NIM) 2024 இல் 4.90% இலிருந்து 2025 இல் 4.50% ஆக குறைந்திருந்தது. மேலும், வங்கியின் நிகர கட்டண அடிப்படையிலான வருமானம் 16.34% வளர்ச்சியைப் பதிவு செய்தது. இது ரூ.7.2 பில்லியனில் இருந்து ரூ.8.3 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதற்கு முதன்மையாக அட்டைகள், பணம் அனுப்புதல், வர்த்தகம் மற்றும் பிற நிதிச் சேவைகளிலிருந்து வரும் கட்டண வருமானம் என்பவை காரணிகளாக அமைந்தது. 2025ஆம் ஆண்டிற்கான வங்கியின் மொத்த தொழிற்பாட்டு வருமானம் ரூ.48.1 பில்லியனாக இருந்தது. இது 2024ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட ரூ.42.6 பில்லியனுடன் ஒப்பிடும்போது 13.00% அதிகமாகும். இதற்கு நிகர வட்டி வருமானம், நிகர கட்டணம், தரகு வருமானம் மற்றும் பிற தொழிற்பாட்டு வருமானத்தில் ஏற்பட்ட அதிகரிப்பு என்பவை காரணமாக அமைந்தன. 

மொத்த தொழிற்பாட்டுச் செலவுகள் 2024 இன் ரூ.19.7 பில்லியனில் இருந்து 8.53% ஆல் அதிகரித்து, 2025இல் ரூ.21.4 பில்லியனை அடைந்தன. பணியாளர்கள் தொடர்பான செலவுகள் 10.40% ஆல் அதிகரித்து, ரூ.10.2 பில்லியனில் இருந்து ரூ.11.3 பில்லியனாக உயர்ந்துள்ளது. ஊழியர்கள் தொடர்பான செலவுகள் அதிகரித்தமை இதன் முதன்மையாக காரணமாக அமைந்தது. பெறுமானத் தேய்வு மற்றும் பெறுமானக் குறைப்பு செலவீனங்கள் உள்ளிட்ட பிற தொழிற்பாட்டுச் செலவுகள் 6.54% ஆல் அதிகரித்தன. இது ஆண்டு முழுவதும் நுகர்வுப் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் அதிகரித்தமையை வெளிப்படுத்துகிறது. செலவுகளை திறம்பட நிர்வகிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்ட செலவுக் கட்டுப்பாட்டு முயற்சிகளை வங்கி தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 

2025ஆம் ஆண்டில் கடன்கள் மற்றும் முற்பணங்கள், பிற நிதிச் சொத்துக்கள் மற்றும் கடன் தொடர்பான உறுதிப்பாடுகள் மீது ரூ.0.6 பில்லியன் பெறுமதியான மதிப்பிறக்க கட்டணத்தை வங்கி பதிவு செய்தது. இது 2024இல் பதிவான ரூ.6.3 பில்லியனை விட குறிப்பிடத்தக்களவு குறைவு ஆகும். சர்வதேச மற்றும் உள்ளூர் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள், வாடிக்கையாளர் கடன் ஆபத்து விவரக் குறிப்பு மற்றும் வங்கியின் கடன் பிரிவின் ஒட்டுமொத்த கடன் தரம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் மதிப்பிறக்க ஏற்பாடுகள் விவேகத்துடன் செய்யப்படுவதை வங்கி உறுதிப்படுத்தியது. இது நிதி அறிக்கைகளில் போதுமான தன்மையை உறுதி செய்தது. வங்கியின் சொத்துத் தர விகிதங்கள் தொடர்ச்சியாக வலுவாக இருந்தன. டிசம்பர் 31, 2025 நிலவரப்படி, மதிப்பிறக்க கட்டண (நிலை 3) விகிதம் 1.03% (2024: 2.10%) ஆகவும் நிலை 3 வழங்கல் காப்பு விகிதம் 86.33% ஆகவும் இருந்தன. இது வங்கித் துறையில் உயர்ந்த பதிவாகும். 

2025ஆம் ஆண்டிற்கான வருமான வரிச் செலவுகள் ரூ.7.5 பில்லியனாக இருந்தன. இது ஒப்பீட்டு காலத்தின் ரூ.6.0 பில்லியனை விட 20.47% அதிகரிப்பைக் குறிக்கிறது. நிதிச் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரி (VAT) 2024இல் ரூ.4.7 பில்லியனில் இருந்து 2025இல் ரூ.5.6 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது 17.69% அதிகரிப்பாகும். இதேபோல், சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) ரூ.0.7 பில்லியனில் இருந்து ரூ.0.8 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது ஒப்பீட்டு ஆண்டை விட 17.70% அதிகரிப்பைக் குறிக்கிறது. 

2025ஆம் ஆண்டில் வங்கி ரூ.12.1 பில்லியனை வரிக்குப் பின்னரான இலாபமாகப் (PAT) பதிவு செய்தது. இது 2024ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 20.47% வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. இருப்பினும், SLISB மறுசீரமைப்பின் தாக்கம் மற்றும் அதன் விளைவாக 2024இல் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஏற்ப சரிசெய்யப்படும்போது, ​​2025ஆம் ஆண்டிற்கான அடிப்படை இலாப வளர்ச்சி 32.78% ஆக இருக்கும். 

நிதி நிலைமைக் கூற்று 

வங்கியின் மொத்த சொத்துக்கள் 2024இல் ரூ.780 பில்லியனில் இருந்து 2025 இல் ரூ.921 பில்லியனாக அதிகரித்தது. இது பன்னிரண்டு மாத காலப்பகுதியில் நிலையான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. வங்கி தனது தற்போதைய வாடிக்கையாளர் தளத்தை தக்க வைத்துக் கொண்டு, வங்கிக்கு புதிதாக வரும் கடன்கள் மற்றும் வைப்புத்தொகைகளை பின்தொடர்ந்தது. கடன்கள் மற்றும் முற்பணங்கள் ரூ.600 பில்லியனாக உயர்ந்து, நிகர வளர்ச்சியாக ரூ.137 பில்லியனை பதிவு செய்தது. அதே வேளை, வைப்புத்தொகை ரூ.733 பில்லியனாக உயர்ந்து, நிகர வளர்ச்சியாக ரூ.86 பில்லியனை பதிவு செய்தது. நிலையான மற்றும் செலவு குறைந்த நிதியுதவியை ஆதரிக்கும் வகையில் வங்கியின் CASA விகிதம் 30%இல் பராமரிக்கப்பட்டது. 

முக்கிய நிதி விகிதங்கள் மற்றும் குறிகாட்டிகள் 

டிசம்பர் 31, 2025 நிலவரப்படி, வங்கி நல்ல மூலதனத்துடன் ஒழுங்குமுறை குறைந்தபட்சங்களை விட அதிகமான மூலதன போதுமான விகிதங்களையும் கொண்டிருந்தது. CET1 மற்றும் மொத்த படி 1 மூலதன விகிதங்கள் 12.39% ஆகவும் மொத்த மூலதன விகிதம் 17.89% ஆகவும் இருந்தது. இது வலுவான மூலதன தளத்தை பிரதிபலிக்கிறது. வங்கி சட்டப்பூர்வ தேவையை விட அதிகமாக திரவத்தன்மை காப்பு விகிதத்தை (LCR) பராமரித்தது. அனைத்து நாணய LCR விகிதமும் ரூபாய் LCR விகிதமும் முறையே 229.92% ஆகவும் 227.99% ஆகவும் பராமரிக்கப்பட்டன. வங்கியின் சொத்துக்களின் தர விகித மதிப்பிறக்க கட்டண (நிலை 3) விகிதம் மற்றும் மதிப்பிறக்க (நிலை 3) வழங்கல் காப்பு விகிதம் முறையே 1.03% (2024 – 2.10%) மற்றும் 86.33% (2024 – 81.79%) ஆக இருந்தன. 

மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆண்டில் உரிமையாண்மை மீதான வருவாய் (ROE) 15.89% (2024 – 15.35%) ஆகவும், சராசரி சொத்துக்களின் மீதான வருவாய் (வரிக்கு முன்னரான இலாபம்) 2.31% (2024 – 2.14%) ஆகவும் இருந்தது. 2025ஆம் ஆண்டில் வங்கியின் பங்கு ஒன்றின் இலாபம் ரூ.19.05 ஆக இருந்தது. இது முன்னைய ஆண்டில் ரூ.15.81 ஆக பதிவு செய்யப்பட்டிருந்தது. டிசம்பர் 31, 2025 அன்று வங்கியின் ஒரு பங்கிற்கான நிகர சொத்து பெறுமதி ரூ.128.87 ஆக இருந்தது (குழுமம் - ரூ.132.33). 

2025ஆம் ஆண்டில், செலான் வங்கி 24 “செலான் பஹசர நூலகங்களைத்” திறந்ததன் மூலம் தனது முதன்மையான சமூகப் பொறுப்புணர்வு முயற்சியை மேலும் விரிவுபடுத்தியது. இதன் மூலம் நிறுவப்பட்ட மொத்த நூலகங்களின் எண்ணிக்கை 289 ஆக உயர்ந்துள்ளது. இந்த மைல்கல், அறிவு மற்றும் கற்றல் வளங்களுக்கான அணுகலை மேம்படுத்துவதுடன் நாடெங்கிலும் பின்தங்கிய பாடசாலைகளில் கல்வியை வளர்ப்பதற்கும் ஆதரவளிப்பதற்கும் வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 

ஜூலை 9, 2025 அன்று, வங்கி ரூ. 15 பில்லியன் மதிப்புள்ள Basel III இணக்கமான, அடுக்கு 2, பட்டியலிடப்பட்ட, தரப்படுத்தப்பட்ட, பிணையற்ற, கீழ்நிலைப்படுத்தப்பட்ட, மீட்கத்தக்க 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகள் தொகுத்திக்கடன்களை வெற்றிகரமாக திரட்டியது. அவை தொடக்க நாளிலேயே அதிகளவு திரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

Fitch மதிப்பீடுகள் செலான் வங்கியின் தேசிய நீண்டகால மதிப்பீட்டை நிலையான கண்ணோட்டத்துடன் இரண்டு புள்ளிகளால் 2025இல் உயர்த்தி A+(lka) ஆக மேம்படுத்தியுள்ளன.

Comments
0

MOST READ

காணொளி
நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களின் ஆதரவு உண்டு!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

பொலிஸ் நிலையங்கள் மாற்றத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது!

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

கல்கிசை - காங்கேசன்துறை இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

GMOA வின் செயற்பாட்டை வன்மையாக கண்டிக்கின்றோம்!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

வெளிநோயாளர் சிகிச்சை பிரிவு செயலிழப்பு!

title