Mar 11, 2026 - 06:34 PM -
0
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டிய குற்றச்சாட்டில், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்னாள் தலைமை கணக்காளர் ஒருவரை இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு இன்று (11) முற்பகல் கைது செய்துள்ளது.
இலஞ்ச ஊழல் சட்டத்தின் 23 (அ) (1) பிரிவின் கீழ், 2011.03.31 முதல் 2013.08.03 வரையான காலப்பகுதியில் தனது சட்டபூர்வமான வருமானத்தை மீறி 4,428,305.70 ரூபாய் பெறுமதியான சொத்துக்களைச் சேர்த்ததாக இவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.
