Mar 11, 2026 - 10:28 PM -
0
2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பீஃபா உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிகளில் ஈரானின் ஆண்கள் தேசிய கால்பந்து அணி பங்கேற்கும் நிலையில் இல்லை என்று அந்த நாட்டின் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அஹ்மத் துன்யமாலி தெரிவித்துள்ளார்.
ஊடகம் ஒன்று அவர் வழங்கிய நேர்காணலின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
உலகக் கிண்ணத்தில் பங்கேற்பதற்கான பொருத்தமான சூழல் எந்தவொரு நிலையிலும் எம்மிடம் இல்லை.
எமது வீரர்கள் பாதுகாப்பாக இல்லை. எனவே, போட்டியில் பங்கேற்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது நிலவவில்லை.
கடந்த எட்டு அல்லது ஒன்பது மாதங்களில், இரண்டு போர்கள் எம்மீது திணிக்கப்பட்டுள்ளன.
இதில் எமது மக்களில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டு தியாகிகளாக்கப்பட்டுள்ளனர். எனவே, பங்கேற்பதற்கான வாய்ப்பு நிச்சயமாக இல்லை என தெரிவித்துள்ளார்.
அதேவேளை ஈரானிய கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் மெஹ்தி தாஜ், இதேபோன்ற கருத்தை முன்வைத்துள்ளார்.
இம்முறை உலக கிண்ண கால்பந்தாட்ட தொடரை அமெரிக்கா, மெக்ஸிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகள் இணைந்து நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
