Header Logo

செய்திகள்
இலங்கையில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறை அமுலாகுமா?

Mar 12, 2026 - 07:51 PM -

0

இலங்கையில் வீட்டில் இருந்தே வேலை செய்யும் முறை அமுலாகுமா?

தற்போதைய நெருக்கடிக்கு மத்தியில் உலகின் ஏனைய நாடுகள் வீட்டிலிருந்து வேலை செய்வதற்கு (Work from Home) முற்பட்டாலும், தற்போதைக்கு இலங்கைக்குள் அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என வர்த்தக, வாணிப மற்றும் கூட்டுறவு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். 

எதிர்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அது குறித்தும் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். 

எரிசக்தியைப் பாதுகாத்துக்கொண்டு மக்கள் முன்னோக்கிச் செல்லக்கூடிய சூழலை உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் கூறினார். 

எரிவாயு சேமிப்பு நிலையமொன்றை நிர்மாணிக்கவும், சப்புகஸ்கந்த மற்றும் முத்துராஜவெல எண்ணெய் தொட்டிகளை நிர்மாணிக்கவும், அதேபோல் திருகோணமலையில் உள்ள பத்து எண்ணெய் தொட்டிகளை நவீனமயமாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக உலகச் சந்தையில் விலை அதிகரிப்பால் இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிப்பை நுகர்வோர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என அமைச்சர் குறிப்பிட்டார். 

அமெரிக்க ஜனாதிபதி உட்பட மோதலில் ஈடுபட்டுள்ள நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு ஏற்ப எரிபொருள் விலை மாறும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title