Header Logo

பல்சுவை
கலப்பட பால் குடித்து 13 பேர் பலி!

Mar 13, 2026 - 04:04 PM -

0

கலப்பட பால் குடித்து 13 பேர் பலி!

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்படப் பால் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கடந்த பிப்ரவரி 16 ஆம் திகதி அப்பகுதியில் உள்ள முதியவர்களுக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம், வாந்தி, வயிற்று வலி மற்றும் கடுமையான சிறுநீரக செயலிழப்பு போன்ற அறிகுறிகள் எழுந்துள்ளன. இதனைத்தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொருவராக இறந்துள்ளனர். 

பிப்ரவரி 22 ஆம் திகதி முதல் உயிரிழப்பு நடந்துள்ளது. 76 வயதான தாடி கிருஷ்ணவேணி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது மகன் அளித்த புகாரைத் தொடர்ந்து ராஜமுந்திரி 3 டவுன் பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட பால் மற்றும் தயிர் ஆகியவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. 

விசாரணையில் எத்திலீன் கிளைக்கால் (Ethylene Glycol) எனும் நச்சு இரசாயனம் கலந்த பாலை குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தப் பாலை இவர்களுக்கு விநியோகித்த கணேஸ்வர ராவ் என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title