Header Logo

பல்சுவை
கலப்பட பால் குடித்து 13 பேர் பலி!

Mar 13, 2026 - 04:04 PM -

0

கலப்பட பால் குடித்து 13 பேர் பலி!

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கலப்படப் பால் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 11 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். கடந்த பிப்ரவரி 16 ஆம் திகதி அப்பகுதியில் உள்ள முதியவர்களுக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம், வாந்தி, வயிற்று வலி மற்றும் கடுமையான சிறுநீரக செயலிழப்பு போன்ற அறிகுறிகள் எழுந்துள்ளன. இதனைத்தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒவ்வொருவராக இறந்துள்ளனர். 

பிப்ரவரி 22 ஆம் திகதி முதல் உயிரிழப்பு நடந்துள்ளது. 76 வயதான தாடி கிருஷ்ணவேணி என்ற பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத்தொடர்ந்து அவரது மகன் அளித்த புகாரைத் தொடர்ந்து ராஜமுந்திரி 3 டவுன் பொலிஸ் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பின்னர் பாதிக்கப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள், அவர்களுக்கு வழங்கப்பட்ட பால் மற்றும் தயிர் ஆகியவை தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. 

விசாரணையில் எத்திலீன் கிளைக்கால் (Ethylene Glycol) எனும் நச்சு இரசாயனம் கலந்த பாலை குடித்ததால் பாதிப்பு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனைத்தொடர்ந்து இந்தப் பாலை இவர்களுக்கு விநியோகித்த கணேஸ்வர ராவ் என்பவரை பொலிஸார் கைது செய்தனர்.

Comments
0

MOST READ

காணொளி
70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

title