Header Logo

செய்திகள்
இறக்குமதி பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

Mar 15, 2026 - 08:48 PM -

0

இறக்குமதி பொருட்களின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலையில் ஒருவித அதிகரிப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வர்த்தக பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

இன்று (15) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், உலகளாவிய ரீதியில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக பொருட்களின் விலை அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாத நிலை காணப்படுவதாகக் குறிப்பிட்டார். 

உலகெங்கிலும் எரிபொருள் போக்குவரத்து மற்றும் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் இலங்கையில் தாக்கத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார். 

அதன்படி, தடையின்றிப் பொருட்களை விநியோகிப்பதற்காக இதுவரை பொருட்களை இறக்குமதி செய்த நாடுகளுக்கு மேலதிகமாக, ஏனைய நாடுகளிலிருந்தும் பொருட்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகப் பிரதி அமைச்சர் மேலும் விளக்கினார். 

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

தற்போது நிலவும் போர்ச் சூழல் உலகின் ஏனைய நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எரிபொருள் மற்றும் ஏனையப் பொருட்களின் போக்குவரத்தில் இது தாக்கத்தைச் செலுத்தியுள்ளது. 

தற்போது ஒரு பீப்பாய் மசகு எண்ணெயின் விலை 100 டொலரை எட்டியுள்ளது. எரிபொருள் விலை மற்றும் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சில குறைபாடுகள் காரணமாக விநியோக வலையமைப்பில் பாதிப்பு ஏற்படலாம். இதனால் பொருட்களை இறக்குமதி செய்யும் போது அவற்றின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

எவ்வாறாயினும், தற்போதைய அரசாங்கம் இது குறித்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. விநியோகத்தைத் தடையின்றிப் பேணுவதற்காகப் புதிய நாடுகளிடம் இருந்து பொருட்களை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். 

எனவே, பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு குறைவாக இருக்கும் என நாம் நம்புகிறோம். அதேநேரம், எமது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணிகளால் விலையில் ஓரளவு அதிகரிப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title