Header Logo

செய்திகள்
புத்தாண்டு சுபநேரப் பத்திரிகையை வௌியிட இணக்கம்

Mar 16, 2026 - 01:56 PM -

0

புத்தாண்டு சுபநேரப் பத்திரிகையை வௌியிட இணக்கம்

ஒருங்கிணைந்த புத்தாண்டு சுபநேரப் பத்திரிகையை வெளியிடுவதற்கு இரு தரப்பினரும் உடன்பாடு தெரிவித்துள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி தெரிவித்துள்ளார். 

இன்று (16) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அமைச்சர், ஏபா பஞ்சாங்க ஆசிரியர் இந்திக ஏபா செனவிரத்ன, திரசர பஞ்சாங்க ஆசிரியர் சமத் கொத்தலாவல மற்றும் மாற்று சுபநேரக் குழுவின் உறுப்பினர்களுடன் நடத்திய கலந்துரையாடலின் போது இந்த இறுதி உடன்பாடு எட்டப்பட்டதாகக் குறிப்பிட்டார். 

இதன்படி, நாளை (17) குறித்த சுபநேரப் பத்திரிகை அச்சிடப்பட்டு, அரச சுபநேரப் பத்திரிகையாக மக்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

கலாசார விவகாரத் திணைக்களம் 2024ஆம் ஆண்டில் அரச சுபநேரக் குழுவை கலைத்திருந்ததுடன், இதுவரையில் அரசாங்கம் மீண்டும் ஒரு சுபநேரக் குழுவை நியமிக்கவில்லை. 

இம்முறை புத்தாண்டு சுபநேரங்கள் போயா குழு உறுப்பினர்களாலேயே வெளியிடப்பட்டதாகவும், அரசாங்கம் உடனடியாக அரச சுபநேரக் குழுவொன்றை நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்து ஜோதிடர்கள் குழுவொன்று கடந்த செவ்வாய்க்கிழமை அரசாங்கத்திற்கு தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தது. 

இந்தச் சூழலில், சர்வஜன அதிகாரம் கடந்த சனிக்கிழமை உறுதியளித்தபடி, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சுபநேரப் பத்திரிகையைத் தயாரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கையை எடுத்திருந்தது. 

17 ஜோதிட அறிஞர்களின் பங்களிப்புடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
0

MOST READ

காணொளி
சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

title