Header Logo

செய்திகள்
மிஹிந்தலை புனித பூமியில் வௌிநாட்டு பெண்ணிற்கு பாலியல் தொல்லை

Mar 16, 2026 - 09:38 PM -

0

மிஹிந்தலை புனித பூமியில் வௌிநாட்டு பெண்ணிற்கு பாலியல் தொல்லை

மிஹிந்தலை புனித பூமியில் ஜெர்மன் நாட்டுப் பெண் ஒருவருக்கு பாலியல் தொல்லை அளிக்க முயற்சித்தார் எனக் கூறப்படும் தொல்பொருள் ஊழியர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த இளம் பெண் கடந்த வெள்ளிக்கிழமை சுற்றுப்பயணமாக இலங்கை வந்துள்ளார். அவர் இன்று (16) வரலாற்றுச் சிறப்புமிக்க மிஹிந்தலை ரஜமஹா விகாரைக்குச் சென்றிருந்தார். 

இதன்போது, சந்தேகநபர் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளிக்க முயன்றுள்ளமை ஆரம்பக்கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அந்த நேரத்தில், மிஹிந்தலையை வழிபட வந்த குழுவினருக்கு குறித்த இளம் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. அவர்கள் உடனடியாக காட்டை நோக்கி ஓடிச் சென்றுள்ளனர். 

சந்தேகநபர் தனது டி-ஷர்ட்டைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொண்டிருந்த வேளையில், தாம் தலையிட்டு அவரை மீட்டதாக அக்குழுவினர் தெரிவித்தனர். 

இச்சம்பவம் குறித்து மிஹிந்தலை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பெண் அநுராதபுரம் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வணக்கத்திற்குரிய வலஹெங்குணவெவே தம்மரதன தேரர், மிஹிந்தலை புனித பூமியில் போதிய பொலிஸ் பாதுகாப்பு இல்லாத காரணத்தினாலேயே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதாகத் தெரிவித்தார்.

Comments
0

MOST READ

காணொளி
ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

ஆசியாவிலேயே குறைந்த விலையில் இலங்கையில் எரிபொருள்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

சஜித் சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொள்கிறார்!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

மீண்டும் எரிபொருளுக்கு QR முறைமை!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

title