Mar 17, 2026 - 03:53 PM -
0
நாட்டில் அதிகரித்த வெப்பநிலையால் சிறுவர்கள், நோயாளர்கள், வயோதிபர்கள் அவதானமாக இருக்கவேண்டும் என யாழ். போதனா வைத்தியசாலையின் பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா தெரிவித்தர்.
வெப்பமான இடங்களில் நிற்றல், அதிக உடற்பயிற்சி, காற்றோண்டமின்மை போன்ற காரணிகளால் Heat stroke ஏற்படக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது.
இதனைத் தடுப்பதற்கு அதிக நீர் அருந்த்துதல், உடற்பயிற்சியினை தவிர்த்தல், மெல்லிய பருத்தி ஆடைகளை அணிதல், மதுபானம் அருந்துதல் சூடான பானங்களை அருந்துவதை தவிர்த்தல், காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணிவரை வெளியில் வேலைசெய்வதை தவிர்த்தல் நன்று.
Heat stroke ஆல் பாதிக்கப்பட்டவரை குளிர்மையான இடத்தில் சேர்த்து மேலதிக ஆடைகள் இருப்பன் அவற்றை களைந்து, குளிர்மையான நீரை பயன்படுத்தி ஒத்தடம் கொடுக்கவேண்டும் உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கவேண்டும் என தெரிவித்தார்.
--
