Mar 18, 2026 - 05:19 PM -
0
தரமற்ற நிலக்கரி விவகாரத்தை முன்னிலைப்படுத்தி, வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றைக் கொண்டு வருவதற்கு எதிர்க்கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கான ஆவணத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியின் 17 பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுவரை கையெழுத்திட்டுள்ளனர்.
குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை நாளை (19) சபாநாயகரிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
