Mar 18, 2026 - 10:34 PM -
0
தரமற்ற நிலக்கரி பயன்பாடு காரணமாக நுரைச்சோலை மின்நிலையத்தின் மின் உற்பத்தித் திறன் வீழ்ச்சியடைந்துள்ளதாக எழுந்துள்ள சர்ச்சைக்குரிய பின்னணியில், நிலக்கரி மூலமான மின் உற்பத்தி குறைவடைந்துள்ளமையை இலங்கை மத்திய வங்கியின் நாளாந்த பொருளாதார குறிகாட்டி அறிக்கைகள் உறுதிப்படுத்தியுள்ளன.
இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின்படி, கடந்த மார்ச் 03 ஆம் திகதி நிலக்கரி எரிப்பு மூலம் 34.2 ஜிகாவோட் (GW) மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டது.
எனினும், நேற்று (17) அந்த அளவு 26.2 ஜிகாவோட் ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
நிலக்கரி மின் உற்பத்தி குறைந்த போதிலும், மார்ச் 3ஆம் திகதி 18.7 ஜிகாவோட் ஆக இருந்த டீசல் மின் உற்பத்தித் திறன், மார்ச் 17 ஆம் திகதி 26 ஜிகாவோட் ஆக அதிகரித்துள்ளது.
எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் இக்காலகட்டத்தில், மின் உற்பத்திக்காக டீசல் மின் நிலையங்கள் அதிக பங்களிப்பை வழங்குவது, தொடர்ச்சியான மின் விநியோகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
