Header Logo

செய்திகள்
பெற்றோலை அதிகளவில் பதுக்கியவருக்கு கட்டாயச் சிறை

Mar 19, 2026 - 11:43 PM -

0

பெற்றோலை அதிகளவில் பதுக்கியவருக்கு கட்டாயச் சிறை

பெற்றோல் விற்பனை செய்வதற்கான முறையான அனுமதிப்பத்திரம் இன்றி, லொறி ஒன்றில் 65 லீட்டர் பெற்றோலை வைத்திருந்த நபருக்கு 2,500 ரூபாய் அபராதமும் 2 மாத கால கட்டாயச் சிறைத் தண்டனையும் விதித்து கல்கிசை நீதவான் பசான் அமரசேன இன்று (19) உத்தரவிட்டார். 

கல்கிசை, படோவிட்ட பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

வெள்ளவத்தை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் இருந்து அதிகளவு எரிபொருளைப் பெற்றுக்கொண்டதாக வெள்ளவத்தை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (18) இரவு அந்த எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டார். 

பின்னர் அவர் கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். 

கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில், லொறியில் இருந்த 4 எரிபொருள் கலன்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். 

கைப்பற்றப்பட்ட எரிபொருளின் மொத்த மதிப்பு சுமார் 20,000 ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

ரவூப் ஹக்கீம் பொய் பேசுவார் என்று எதிர்பார்க்கவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

அரசாங்கம் அமெரிக்காவை கண்டித்து அறிக்கை வௌியிடவில்லை!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

இந்த அரசாங்கம் மக்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

பல்கலைக்கழக மாணவர்களிடம் 5 மணி நேரம் விசாரணை!

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிராக விவசாயிகள் கண்டனப் போராட்டம்!

எம்.பி அர்ச்சுனாவுக்கு எதிராக விவசாயிகள் கண்டனப் போராட்டம்!

எரிபொருள் பதுக்கலை தடுக்க வேண்டும்!

எரிபொருள் பதுக்கலை தடுக்க வேண்டும்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் போராட்டம்!

யாழ். பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் போராட்டம்!

சாவு பயத்தை காட்டிடாங்க பர்மா!

சாவு பயத்தை காட்டிடாங்க பர்மா!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

எரிபொருள் வரிசையில் காத்திருந்த எம்.பி!

மஹோற்சவம்

மஹோற்சவம்

title