Mar 22, 2026 - 08:51 PM -
0
அமெரிக்கா ஈரானின் எரிசக்தி உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்தால், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக மூடிவிடுவோம் என்று ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) தெரிவித்துள்ளது.
இது குறித்த அறிக்கை ஈரான் ஊடகங்களில் தற்போது வௌியாகியுள்ளது.
முன்னதாக, 48 மணி நேரத்திற்குள் ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாவிட்டால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களை அழித்துவிடுவேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.
அதற்கு பதில் வழங்கும் வகையிலேயே ஈரான் இந்த தகவலை வௌியிட்டுள்ளது.
