Apr 3, 2026 - 09:56 AM -
0
யாழ்ப்பாணம் கொடிகாமத்தில் பொலிஸ் அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்த சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேக நபரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டபோதும் பிரதான சந்தேக நபர் தேடப்பட்டு வந்தார்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபர் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஊடாக நேற்று (03) சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
இதனையடுத்து அடையாள அணிவகுப்பை நடத்த உத்தரவிட்ட நீதிவான் சந்தேக நபரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கடந்த 28 ஆம் திகதி கொடிகாமம், கெற்பேலி பகுதியில், சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்ற இடத்திற்கு சென்ற கொடிகாமம் பொலிஸ் நிலையத்தின் இரண்டு உத்தியோகஸ்தர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்தார்.
--
