Apr 6, 2026 - 06:34 AM -
0
தலைநகர் டெல்லியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்படுவதாக டெல்லி பொலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட பொலிஸார் மராட்டிய மாநிலம் மும்பையில் 2 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதும் அவர்கள் டெல்லியில் குண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து மராட்டிய மாநில பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாருடன் இணைந்து ஜெய்ஷ் இ முகமது, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 2 பயங்கரவாதிகளை டெல்லி பொலிஸார் கைது செய்தனர்.
கைதான பயங்கரவாதிகள் இருவரும் மும்பையில் இருந்து டெல்லி சென்று அங்கு குண்டுத் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரிடமும் புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
