Header Logo
Mogo Academy

பல்சுவை
கணவனைப் பிரிந்த மகளுக்கு அமோக வரவேற்பு

Apr 6, 2026 - 12:27 PM -

0

கணவனைப் பிரிந்த மகளுக்கு அமோக வரவேற்பு
Mobitel inner

விவகாரத்து பெற்ற மகளுக்கு மாலை அணிவித்து, மேளதாளங்கள் முழங்க, ஆடிப்பாடி உற்சாகமாக வரவேற்பு அளித்துள்ள புதுமையான சம்பவம் இந்தியாவில் நிகழ்ந்துள்ளது. 

இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற நீதிபதி ஞானேந்திர குமார் சர்மா. இவரது மகள் பிரணிதா முதுநிலைப் பட்டதாரி. இவருக்கும் ராணுவ அதிகாரி ஒருவருக்கும் கடந்த 2018 இல் திருமணம் நடைபெற்றது. 

இந்நிலையில், திருமணமான சில மாத காலத்திலேயே கணவர் வீட்டில் பிரணிதா உடல், மன ரீதியாகக் கொடுமைகளுக்கு ஆளானார். 

ஒரு குழந்தை பிறந்த பின்னரும் நிலைமை மாறாததால், துணிச்சலுடன் விவகாரத்து கோரி நீதிமன்றத்தை நாடினார் பிரணிதா. 

நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, கடந்த சனிக்கிழமை பிரணிதாவிற்கு விவகாரத்து வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

வழக்கமாக, விவகாரத்து என்பது ஒரு சோகமான நிகழ்வாகப் பார்க்கப்படும் நிலையில், பிரணிதாவின் குடும்பத்தினர் அதனை ஒரு புதிய தொடக்கமாகக் கொண்டாடினர். 

நீதிமன்ற வாசலிலேயே அவருக்கு மாலை அணிவித்து, ஆடிப் பாடி உற்சாகத்துடன் தாய் வீட்டிற்கு ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். 

இதுகுறித்து தந்தை ஞானேந்திர குமார் தெரிவிக்கையில், 

“மகள் என்பவர் யாருடைய உடைமையும் அல்ல. சமூகம் என்ன சொல்லும் என்று அஞ்சுவதைவிட, நம் மகளின் மகிழ்ச்சியும் கண்ணியமுமே முக்கியம். நரகமாக மாறிய ஒரு வாழ்க்கையிலிருந்து அவர் மீண்டுவந்திருப்பதை நாங்கள் வரவேற்கிறோம்,” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். 

முன்னாள் கணவரிடமிருந்து எவ்வித வாழ்க்கைப் படித்தொகையையோ உடைமைகளையோ எதிர்பார்க்காமல் வெறும் கையுடன் வெளியேறிய பிரணிதா, 

“பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளை அமைதியாகச் சகித்துக்கொள்ளக் கூடாது. கல்வி கற்று சொந்தக் காலில் நிற்பதே நமக்கான பாதுகாப்பு,” என்று மற்ற பெண்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.


MOST READ

காணொளி
செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

Mobitel Upahara