Apr 6, 2026 - 09:26 PM -
0
ஐந்து வாரங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு கட்டமைப்புத் திட்டம் குறித்து அமெரிக்காவும் ஈரானும் இன்று (06) ஆலோசித்தன.
இதன்போது, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகவும், தற்காலிக போர்நிறுத்தத்தின் கீழ் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) விரைவாகத் திறக்கக் கோரும் அழுத்தங்களுக்கு ஈரான் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் தெஹ்ரான் கூறியுள்ளது.
போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவு குறித்து, பாகிஸ்தான் ஊடாக ஈரான் தனது பதிலை வழங்கியுள்ளது.
அதில் தற்காலிக போர்நிறுத்தத்தை நிராகரித்துள்ளதுடன், போருக்கு நிரந்தரமான தீர்வு அவசியம் என்பதை ஈரான் வலியுறுத்தியுள்ளதாக ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிராந்தியத்தில் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருதல், ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாதுகாப்பான பயணத்திற்கான நெறிமுறை, தடைகளை நீக்குதல் மற்றும் புனரமைப்பு உள்ளிட்ட 10 சரத்துகளை ஈரானின் பதில் உள்ளடக்கியுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கான முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை ஊடாக போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணிக்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், தெஹ்ரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார்.
