Header Logo

செய்திகள்
ஈரான் போர்ச் சேதம் 270 பில்லியன் டொலராக உயர்வு

Apr 14, 2026 - 06:33 PM -

0

ஈரான் போர்ச் சேதம் 270 பில்லியன் டொலராக உயர்வு

ஈரான் போரினால் ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீடுகளைப் பேச்சுவார்த்தையின் ஒரு அங்கமாக மாற்றுவதற்கான முயற்சியாக, அந்தச் சேதங்களின் மதிப்பைக் கணக்கிட்டு வருவதாக ஐஆர்ஜிசி உடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ரஷ்ய ஊடகங்களிடம் பேசிய ஈரான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாத்திமா மொஹஜெரானி, ஒரு முதற்கட்ட மற்றும் தோராயமான மதிப்பீட்டின்படி இந்தத் தொகை இதுவரை சுமார் 270 பில்லியன் அமெரிக்க டொலர் எனத் தெரிவித்துள்ளார். 

எனினும், இது மாற்றமடையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

கட்டிடங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் ஏற்பட்ட வருவாய் இழப்பு உள்ளிட்டவற்றை உள்ளடக்கி ஈரான் அதிகாரிகள் தொடர்ந்து மதிப்பீடுகளைச் செய்து வருவதாக தஸ்னிம் செய்தியை மேற்கோள்காட்டி அவர் மேலும் கூறியுள்ளார். 

கடந்த வார இறுதியில் அமெரிக்காவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இழப்பீடு கோருவது முக்கிய விவகாரங்களில் ஒன்றாக இருந்ததாக மொஹஜெரானி கூறியுள்ளதாக ஈரானின் அரச செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்ற போதிலும், உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை என்று அமெரிக்க உப ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) முன்னதாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title