Apr 21, 2026 - 09:54 AM -
0
அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிந்தவூர் இரண்டாம் குறுக்கு வீதியில் உள்ள நாற்சந்தி ஒன்றில், நேற்று (20) மோட்டார் சைக்கிளும், முச்சக்கர வண்டியும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த நாற்சந்தியில் வாகனங்களைச் செலுத்தியவர்களின் கவனக்குறைவே இந்த விபத்திற்குக் காரணம் என்பது அருகில் பொருத்தப்பட்டிருந்த CCTV வீடியோ மூலம் உறுதியாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்தில் காயமடைந்த இருவர் நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
இப்பகுதியில் விழிப்பூட்டல் சமிஞ்சைகள் இருந்தபோதிலும், தொடர்ச்சியாக விபத்துக்கள் இடம்பெற்று வருகின்றன. எனவே, விபத்துக்களைத் தவிர்க்கும் பொருட்டு, குறித்த நாற்சந்தியின் நான்கு திசைகளிலும் முறையான வேகத்தடைகளை அமைக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
--
