Header Logo

கிழக்கு
மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

Apr 21, 2026 - 12:10 PM -

0

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

ஈஸ்டர் குண்டுத்தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பில் இன்று (21) பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகளும், நீதி கோரிய போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. 

மட்டக்களப்பு மாநகரசபையின் ஏற்பாட்டில், நகரின் காந்தி பூங்காவிலுள்ள ஈஸ்டர் படுகொலை ஞாபகார்த்த தூபியில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. மாநகர முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதி முதல்வர் தி.டினேஸ், மாநகரசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். 

நினைவுத்தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றி, மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்திக்காகப் பிரார்த்தனை செய்யப்பட்டது. 

மாநகர முதல்வர் மற்றும் முன்னாள் பிரதி முதல்வர் சத்தியசீலன் ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தினர். 

இந்நிலையில், மட்டக்களப்பு அரசடி, கல்லடி பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் இணைந்து மற்றுமொரு நினைவேந்தலை முன்னெடுத்தனர். கிழக்கு சமூக அபிவிருத்தி மையத்தின் பணிப்பாளர் புஹாரி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மதத்தலைவர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். 

அஞ்சலி நிகழ்வைத் தொடர்ந்து, தாக்குதலுக்குப் பின்னால் உள்ள உண்மைகளைக் கண்டறியக் கோரியும், நீதி கோரியும் கவனயிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

ஈஸ்டர் தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயம் மற்றும் நினைவேந்தல் நடைபெற்ற இடங்கள் அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!