Header Logo

செய்திகள்
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை

Apr 21, 2026 - 12:23 PM -

0

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என எச்சரிக்கை

ஜப்பானில் மீண்டும் ஒரு பயங்கர நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

சுனாமி எச்சரிக்கை மீளப் பெறப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக இவ்வாறு நிலநடுக்க அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இதன்படி, அடுத்த ஒரு வார காலத்திற்குள் பாரிய நிலநடுக்கம் ஏற்படுவதற்கான அபாயம் காணப்படுவதாக ஜப்பானிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். 

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 8.0 அல்லது அதற்கு மேற்பட்ட வலுவான தீவிரத்தன்மையுடன் பதிவாகக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். 

நேற்று அந்நாட்டின் வடகிழக்கு கடலோரப் பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 7.7 அலகுகளாகப் பதிவான நிலநடுக்கம் காரணமாக, கிழக்குக் கடற்கரைப் பகுதியை சுனாமி அலைகள் தாக்கியிருந்தன. 

ஜப்பான் புவியியல் ரீதியாக "நெருப்பு வளையம்" (Ring of Fire) பகுதியில் அமைந்துள்ளதால், அங்கு ஆண்டுக்கு சுமார் 1,500 நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. 

மேலும், உலகம் முழுவதும் பதிவாகும் ரிக்டர் அளவுகோலில் 6.0 க்கும் அதிகமான நிலநடுக்கங்களில் 10% ஜப்பானிலேயே பதிவாகின்றன. 

2011 மார்ச் மாதம் இவாதே மாகாணத்தின் தெற்கே ஏற்பட்ட ரிக்டர் அளவுகோலில் 9.0 ஆகப் பதிவான பாரிய நிலநடுக்கமே ஜப்பானில் இதுவரை பதிவான மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமாகும். அதன் விளைவாக ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்து, வரலாற்றின் மிக மோசமான அணுசக்தி பேரழிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. 

அந்தப் பேரழிவிற்குப் பிறகு, இத்தகைய எந்தவொரு நில அதிர்வின் போதும் மக்களை உடனடியாக உயரமான இடங்களுக்கு வெளியேற்றுவதற்கு அந்நாட்டு அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

Comments
0

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

title