Apr 22, 2026 - 12:25 PM -
0
கைது செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர நுவரெலியா நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தனது குடும்பத்தினருடன் கடந்த (21) ஆம் திகதி நுவரெலியாவிற்கு சுற்றுலா சென்றிருந்த வேளையில், அங்கு இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின் போது, தனது கைத்துப்பாக்கியைக் காட்டி ஒருவரை அச்சுறுத்தினார் என்று கூறப்படும் சம்பவம் தொடர்பில் நுவரெலியா பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
அந்த முறைப்பாட்டிற்கு அமைய, நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
