Header Logo

செய்திகள்
நுவன் துஷாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ்

Apr 23, 2026 - 12:08 PM -

0

நுவன் துஷாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு வாபஸ்

2026 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக்  உள்ளிட்ட சர்வதேச பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்பதற்காக, தமக்கு "தடையின்மைச் சான்றிதழை" வழங்குமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு கட்டளை பிறப்பிக்குமாறு கோரி கிரிக்கெட் வீரர் நுவன் துஷாரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று (23) கொழும்பு மாவட்ட நீதிமன்றத்திலிருந்து வாபஸ் பெறப்பட்டது.


இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, மனுதாரர் சார்பில் முன்னிலையான சிரேஷ்ட சட்டத்தரணி ஜி.ஜி. அருள்பிரகாசம் நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்தார்.


இதன்போது, ஐபிஎல் தொடரின் பல போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ளதால், இந்த கோரிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தமது கட்சிக்காரர் விரும்பவில்லை என்றும், எனவே மனுவை வாபஸ் பெற அனுமதிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.


இதனையடுத்து, குறித்த மனுவை வாபஸ் பெறுவதற்கு அனுமதி வழங்கிய நீதிமன்றம், அதனைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

title