Header Logo

பல்சுவை
மனைவி, தாயை கொன்று 2 குழந்தைகளுடன் இளைஞர் தற்கொலை!

Apr 24, 2026 - 03:46 PM -

0

மனைவி, தாயை கொன்று 2 குழந்தைகளுடன் இளைஞர் தற்கொலை!

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம் மாநிலம் திருப்பதியில் இளைஞர் ஒருவர் தனது மனைவி மற்றும் தாயை கொன்றுவிட்டு, 2 குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருப்பதி மாவட்டம் வெங்கடகிருஷ்ணபாலம் கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன் (37 வயது). இவரது மனைவி ஹரிதா (35 வயது). இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் இருந்தனர். மோகனின் தாய் சந்திரகலா (65 வயது) இவர்களுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் 23 ஆம் திகதி மோகன் தனது வீட்டில் வைத்து சேலையால் மனைவி மற்றும் தாயை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். 

பின்னர் குழந்தைகள் படிக்கும் பாடசாலைக்கு சென்ற மோகன், அங்கிருந்து குழந்தைகளை அழைத்து வந்துள்ளார். இதையடுத்து இரவு சுமார் 7.15 மணியளவில் வேப்பகுண்டா ரயில் நிலையம் அருகே சென்ற மோகன், தனது 2 குழந்தைகளுடன் அந்த வழியாக வந்த எழும்பூர் - காச்சிகுடா ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 

இதையடுத்து விரைந்து வந்த ரயில்வே அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அவர்களது உடல்களை கைப்பற்றினர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை மற்றும் தற்கொலைக்கான நோக்கம் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரியவில்லை. 

மோகனுக்கு ஏதேனும் மனநலப் பிரச்சினைகள் இருந்தனவா என்பது உள்ளிட்ட கோணங்களில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

title