Header Logo

ஏனையவை
அமெரிக்க தகவல் கூடத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அமெரிக்கத் தூதரகம்!

Apr 27, 2026 - 12:49 PM -

0

அமெரிக்க தகவல் கூடத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் அமெரிக்கத் தூதரகம்!

நேற்று (26) யாழ்ப்பாணத்திலமைந்துள்ள அமெரிக்க தகவல் கூடத்தின் 15 ஆவது ஆண்டு நிறைவினை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் கொண்டாடியது. கல்வி, புத்தாக்கம் மற்றும் அமெரிக்க விழுமியங்கள் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்தும் நிகழ்ச்சித் திட்டங்களினூடாக வட இலங்கையிலுள்ள சமூகங்களை அமெரிக்காவுடன் இணைப்பதில் நீண்டகாலமாக அது வகிக்கும் பங்கினை இந்நிகழ்வு எடுத்துக்காட்டியது. 

அமெரிக்க சுதந்திரத்தின் 250 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் உலகளாவிய ரீதியில் இடம்பெறும் Freedom 250 முன்முயற்சியின் ஒரு பகுதியாக, புதிய “Freedom 250 Pavilion” கூடத்தினையும் இதன்போது தூதரகம் திறந்து வைத்தது. 

யாழ்ப்பாணத்திலமைந்துள்ள அமெரிக்க தகவல் கூடமானது, உள்ளூர் சமூகங்களுடனான நேரடி ஊடாட்டத்திற்கான ஒரு தளமாக Jaffna Social Action Center உடனான பங்காண்மையுடன் 2011 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. திறனாய்வுச் சிந்தனை, தலைமைத்துவம் மற்றும் புத்தாக்கம் போன்ற விடயங்களில் திறன்களை கட்டியெழுப்பும் அதேவேளை, அமெரிக்காவைப் பற்றி அறிந்துகொள்வதற்கான வாய்ப்புகளையும் அது வழங்குகிறது. யுத்தத்திற்குப் பின்னரான காலகட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட இத்தகவல் கூடமானது, வட இலங்கையில் வளர்ந்துவரும் தலைவர்களை அமெரிக்க அனுபவங்களிலும், கண்ணோட்டங்களிலும் வேரூன்றிய சிந்தனைகள், வளங்கள் மற்றும் வாய்ப்புகளுடன் இணைப்பதில் ஒரு முக்கிய பங்காற்றியுள்ளது. 

ஊடாடும் நிகழ்ச்சித்திட்டங்களையும் சமூக நிகழ்வுகளையும் நடத்துவதற்கான இத்தகவல் கூடத்தின் திறனை Freedom 250 Pavilion விரிவுபடுத்துவதோடு, ஒத்துழைப்பு, கலந்துரையாடல் மற்றும் கற்றலுக்கான ஒரு ஊக்கம் நிறைந்த இடமாக அதன் பங்கினை மேலும் வலுப்படுத்துகிறது. 

“அமெரிக்க விழுமியங்கள், கலாச்சாரம் மற்றும் கருத்துக்களை வட இலங்கை மக்களுடன் பகிர்ந்துகொள்வதில் அமெரிக்கா கொண்டுள்ள உறுதிப்பாட்டினை யாழ்ப்பாணத்திலமைந்துள்ள இந்த அமெரிக்கத் தகவல் கூடம் பிரதிபலிக்கிறது. எமது ஸ்தாபக இலட்சியங்களையும், யாழ்ப்பாணம் உட்பட உலகம் முழுவதும் காணப்படும் எமது பங்காண்மைகளையும் எடுத்துக்காட்டும் ஒரு மைல் கல்லான, அமெரிக்க சுதந்திரத்தின் 250 வருடங்களை அமெரிக்கா இவ்வருடம் ஜுலை மாதம் 4 ஆம் திகதி கொண்டாடவுள்ளது. 

புதிய Freedom 250 Pavilion கூடம் மற்றும் எமது நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகியவற்றினூடாக, அமெரிக்காவுடன் ஒன்றிணைந்து, எமது வரலாறு, சமூகம் மற்றும் புத்தாக்கங்கள் பற்றி மேலும் அறிந்துகொள்ளுமாறு சமூகத்தை நாம் அழைக்கிறோம்.” என இந்நிகழ்வில் உரையாற்றிய அமெரிக்கத் தூதரகத்தின் பொது விவகார அலுவலரான மேனகா நய்யார் கூறினார். 

யாழ்ப்பாணத்திலமைந்துள்ள இந்த அமெரிக்கத் தகவல் கூடமானது 2025 ஆம் ஆண்டில் மாத்திரம் 10,000 இற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் பயனடையும் வகையில் ஏறக்குறைய 400 நிகழ்ச்சித் திட்டங்களை நடத்தியுள்ளது. 

இலக்கம் 23, அத்தியடி வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் எனும் முகவரியில் அமைந்துள்ள இத்தகவல் கூடமானது, அமெரிக்கா, ஆங்கில மொழியினைக் கற்றல், கல்வி தொடர்பான ஆலோசனைகள் மற்றும் திறன் சார்ந்த நிகழ்ச்சித் திட்டங்கள் என்பன தொடர்பான வளங்களை இலவசமாக வழங்குகிறது. 

எமது இத்தகவல் கூடத்திற்கு நேரில் வருகை தருவதன் மூலமாகவோ, அல்லது 021 222 0665 எனும் தொலைபேசி இலக்கத்தினைத் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ அல்லது info@americancornerjaffna.com எனும் மின்னஞ்சல் முகவரியூடாகத் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ இங்கு நடைபெறும் இலவச நிகழ்ச்சித் திட்டங்களில் பங்கேற்கலாம். 

இங்கு நடைபெறும் நிகழ்வுகள், பதிவு செய்தல் மற்றும் உறுப்பினராவதற்கான வாய்ப்புகள் தொடர்பான மிகச்சமீபத்திய இற்றைப்படுத்தல்களை அறிந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திலமைந்துள்ள அமெரிக்கத் தகவல் கூடத்தினை முகநூலில் (facebook.com/amcornerjaffna) பின்தொடரவும். 

எமது American Spaces வலையமைப்பிற்கு உங்களை வரவேற்கிறோம், யாழ்ப்பாணத்திலமைந்துள்ள அமெரிக்கத் தகவல் கூடமானது, கொழும்பு, கண்டி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் கிளைகளைக் கொண்டுள்ள, அமெரிக்கத் தூதரகத்தின் American Spaces வலையமைப்பின் ஒரு பகுதியாகும். 

இவை அனைவருக்கும் திறந்திருப்பதோடு, ஊடாட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் செயற்பாடுகள் ஊடாக அமெரிக்க மக்கள், அமெரிக்க கலாச்சாரம் மற்றும் கருத்துக்களைப் பற்றி அறிந்துகொள்வதற்கு ஓர் வரவேற்புமிக்க சூழலையும் வழங்குகின்றன. 

இலங்கை முழுவதும், ஆங்கில மொழியறிவினை மேம்படுத்துவதற்கும், அமெரிக்காவில் காணப்படும் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை ஆராய்வதற்கும், கலாச்சார நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும், அமெரிக்காவைப் பற்றிய நம்பகமான தகவல்களை அணுகுவதற்குமான இலவச வாய்ப்புகளை இவை வழங்குகின்றன. 

நீங்கள் ஒரு மாணவராக, கல்வி கற்பிப்பவராக, அல்லது இளம் தொழில் வல்லுநராக என யாராக இருந்தாலும், இந்த இடங்களுக்கு வருகை தரவும், ஒரு நிகழ்ச்சித் திட்டத்தில் இணையவும், மற்றும் கற்றல், கருத்துப் பரிமாற்றம் மற்றும் புதிய சிந்தனைகளில் கவனம் செலுத்தும் ஒரு சமூகத்துடன் தொடர்பினை ஏற்படுத்தவும் உங்களை நாங்கள் அழைக்கிறோம்.

Comments
0

MOST READ

காணொளி
வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

வாயில் பிளாஸ்டர் ஒட்டி போராட்டம்!

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா கைது

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

செம்மணி மனித புதைகுழியின் 3 ஆம் கட்ட அகழ்வு ஆரம்பம்

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

கிளிநொச்சிக்கு விஜயம் செய்த பிரதியமைச்சர் அனில் ஜெயந்த

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

title