Header Logo

செய்திகள்
பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல் குறித்து எச்சரிக்கை!

May 1, 2026 - 10:10 AM -

0

பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல் குறித்து எச்சரிக்கை!

பிரித்தானியாவின் பயங்கரவாத அச்சுறுத்தல் மட்டமானது எச்சரிக்கை நிலையில் இருந்து தீவிரம் என்ற நிலைக்கு, 4 ஆண்டுகளுக்குப் பின்னர் நேற்று (30) முதன்முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. 

கடந்த புதன்கிழமை வடக்கு லண்டனின் கோல்டர்ஸ் கிரீன் பகுதியில் இரு யூத இனத்தவர்கள் குத்திக் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் டேன் ஜார்விஸ் (Dan Jarvis) கூறுகையில், இந்த அச்சுறுத்தல் மட்ட உயர்வு லண்டன் தாக்குதலால் மாத்திரம் ஏற்பட்டதல்ல என தெரிவித்துள்ளார். 

இஸ்லாமிய தீவிரவாதம் மற்றும் தீவிர வலதுசாரி அச்சுறுத்தல்கள் பரந்த அளவில் அதிகரித்துள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

மெட்ரோபாலிட்டன் பொலிஸாரால் பயங்கரவாதத் தாக்குதலாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கத்திக்குத்துச் சம்பவம், பிரித்தானிய யூத சமூகத்தை இலக்கு வைத்து நடத்தப்படும் தொடர்ச்சியான சம்பவங்களின் அண்மைய நிகழ்வாகும். 

'தீவிரம்' என்ற அச்சுறுத்தல் மட்டம் என்பது, அடுத்த ஆறு மாதங்களுக்குள் பயங்கரவாதத் தாக்குதல் நடைபெறுவதற்கான அதிக வாய்ப்பு இருப்பதை உணர்த்துகிறது. 

புலனாய்வு, பொலிஸ் மற்றும் அரசாங்கம் பொதுமக்களைப் பாதுகாக்க 24 மணி நேரமும் பணியாற்றி வருவதாக அமைச்சர் ஜார்விஸ் உறுதியளித்துள்ளார். 

இதனால் அங்குள்ள வழிபாட்டு இடங்கள் உள்ளிட்ட பல முக்கிய ஸ்த்தலங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ

காணொளி
இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

இன்று அடையாளப்படுத்தப்பட்ட 3 புதிய மனித எச்சங்கள்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

வலி. வடக்கு பகுதிகளில் காணிகளை விடுவிக்க கோரி போராட்டம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

விகாராதிபதிக்கு பிரதேச சபை தவிசாளர் கடிதம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

நுவரெலியாவில் தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம்!

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

சர்வதேச தொழிலாளர் தினம் 2026

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

அனுபவமின்மையால் பில்லியன் கணக்கில் இழப்பு

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 03 ஆம் நாள் அகழ்வுகள்!

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

அர்ச்சுனா பிணையில் விடுவிப்பு

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

குற்றவாளிகள் தப்பிக்க முடியாது!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

காணி அளவீட்டு பணிகள் நிறுத்தம்!

title