May 8, 2026 - 02:09 PM -
0
கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெருவெளி வயல் பகுதியில், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சித்தாண்டியைச் சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் நேற்று (07) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, நேற்று இரவு 7.30 மணியளவில் குறித்த வயல் பகுதியிலுள்ள வாடி (கொட்டகை) ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டனர். இதன்போது, அங்கு சட்டவிரோதமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கி ஒன்றினை மீட்டதுடன், சந்தேக நபரையும் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று (08) ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--
