May 15, 2026 - 05:29 PM -
0
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக திகழ்ந்த விஜய் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார். தேர்தல் நெருங்கியவுடன் பல எதிர்க்கட்சிகள், கருத்துக்கணிப்பு என அனைத்துமே விஜய்க்கு எதிராகவே இருந்தது.
ஆனால் அப்போது இருந்தே ஜோதிடர் ரிக்கி ராதன் பண்டிட் விஜய் தேர்தலில் ஜெயிப்பார், முதலமைச்சர் ஆவார் என அடித்து சொன்னார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளன்று கூட முதல் ஆளாக வாழ்த்து சொல்வதற்காக பூங்கொத்துடன் விஜய் வீட்டிற்கு சென்றார். முடிவுகள் அறிவிக்கப்படும் முன்பே விஜய் தான் ஜெயிப்பார் என்று ஆணித்தரமாக நம்பினார். அதன் படியே தற்போது முதலமைச்சரும் ஆகிவிட்டார்.
இந்த நிலையில், தனியார் ஊடகம் ஒன்றில் பேட்டியளித்த ரிக்கி ராதன் பண்டிட், விஜய்க்கு ஜோசியத்தில் பெரிதாக நம்பிக்கை இல்லை. எனக்கும் அவருக்கும் இருக்கும் உறவு ஒரு அப்பா, மகன் போல, ஒரு நண்பர் போல ஒரு பிணைப்புதான், இது தெரியாமல் என்னை அவரோடு இணைத்து பலரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதல்வர் விஜய்க்கு பிரதமராகும் அளவுக்கு யோகம் இருக்கிறது. விஜயின் ஜாதகம் பிரதமர் மோடியின் ஜெராக்ஸ் காப்பி போல இருக்கிறது. இன்னும் 30 - 40 ஆண்டுகளுக்கு அவர் போட்டியே இல்லாமல் வாழ்வார் என அவர் கூறினார்.
மேலும் மோடிக்கு இருக்கும் யோகத்தில் கால்வாசிதான் ராகுலுக்கு இருக்கிறது. வரும் 2029 இல் மோடிக்கு ராகுதசை ராகு புத்தி. அவர் பிரதமராவது கடினம். மூன்றாம் அணி ஒன்று நிச்சயம் உருவாகும்.. விஜய் அப்போது தன் யோகத்தின் உச்சத்தில் இருப்பார்’ என அவர் சொல்லியிருக்கிறார். இதன் மூலம் விஜய்க்கு பிரதமர் ஆகும் யோகம் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
