Header Logo
Mogo Academy

செய்திகள்
நிதி முறைகேடுகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளக்கம்

May 16, 2026 - 10:46 PM -

0

 நிதி முறைகேடுகள் குறித்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விளக்கம்
Mobitel inner

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் மேற்கொண்ட பணச் செலுத்துகை மற்றும் நிறுவனத்தின் சென்னை காரியாலயத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

 

அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அந்த நிறுவனம் இன்று (16) தெரிவித்துள்ளதாவது, துபாயில் அமைந்துள்ள சேவை வழங்கும் நிறுவனம் ஒன்றின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் கணக்கு மூன்றாம் தரப்பு ஒன்றினால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 

 

இதன் காரணமாக, அந்த மோசடியான மின்னஞ்சல் செய்திகள் மூலம் வழங்கப்பட்ட வங்கி கணக்கு விபரங்களின் அடிப்படையில், தமது நிறுவனம் 974,000 திர்ஹாம் தொகையை அந்த தவறான கணக்கிற்கு செலுத்தியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதேபோல், சென்னை காரியாலயத்தில் இடம்பெற்ற நிதி முறைகேடு குறித்து விளக்கமளித்துள்ள அந்த நிறுவனம், சென்னையில் அமைந்துள்ள தமது காரியாலயத்தில் பணிபுரிந்த நிதிப் பிரிவைச் சேர்ந்த இந்திய ஊழியர்கள் குழுவொன்றே இந்த மோசடியை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது. 

 

அவர்கள் வணிக விலைப்பட்டியல்களின் கையொப்பங்கள் மற்றும் பணச்செலுத்துகை விபரங்களை போலி ஆவணங்கள் மூலம் மாற்றியமைத்து, நீண்டகாலமாக 22 மில்லியன் இந்திய ரூபாய் தொகையை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

 

இதற்கமைய, இந்த இரண்டு சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளும் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

Mobitel Upahara