May 26, 2026 - 04:10 PM -
0
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகக் கருதப்படும் ஷிரான் பாசிக் என்பவர் டுபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்.
டுபாய் பாதுகாப்புப் பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானிய போதைப்பொருள் வலையமைப்புடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டிருப்பதால், இவர் அமெரிக்காவிற்கும் தேடப்படும் ஒரு நபராக விளங்குகிறார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இவர் டுபாயில் ஒரு பெரும் கோடீஸ்வரரைப் போல மறைந்து வாழ்ந்து வந்துள்ளதாகப் பொலிஸ் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இலங்கைக்கு போதைப்பொருட்களை விநியோகிக்கும் 5 முக்கிய பெரும் கடத்தல்காரர்களில் ஷிரான் பாசிக் என்பவரும் ஒருவர் எனக் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இவரது கைது குறித்து இலங்கைக்கு இதுவரை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

