May 27, 2026 - 12:26 PM -
0
கடந்த மே 15 ஆம் திகதி வெளிவந்த கருப்பு திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
சிங்கம் 2 திரைப்படத்திற்கு பின் 13 ஆண்டுகளாக சூர்யா ரசிகர்கள் எதற்காக காத்திருந்தார்களோ, அது தற்போது கருப்பு திரைப்படத்தில் நிறைவு பெற்றுள்ளது.
சூர்யாவின் திரை வாழ்க்கையில் முதல் முறையாக 200 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்த படமாகவும், தமிழ்நாட்டில் 100 கோடி ரூபாவுக்கும் மேல் வசூலித்த படமாகவும் சாதனை படைத்துள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிலையில், 12 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ள கருப்பு திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 12 நாட்களில் உலகளவில் இப்படம் 275 கோடி ரூபாவுக்கும் மேல் வசூல் செய்துள்ளது. விரைவில் 300 கோடி ரூபா மைல்கல்லை தொடுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

