Header Logo
Mogo Academy

செய்திகள்
தமிழக மீனவர்களை இலங்கையிலிருந்து விடுவிக்க விஜய், மோடியிடம் கோரிக்கை

May 27, 2026 - 07:34 PM -

0

தமிழக மீனவர்களை இலங்கையிலிருந்து விடுவிக்க விஜய், மோடியிடம் கோரிக்கை
Mobitel inner

இலங்கையில் உள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழக முதலமைச்சர் விஜய் இன்று (27) இந்திய பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து கலந்துரையாடிய போதே, இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். 

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் கவலைக்கிடமான அளவிற்கு அதிகரித்துள்ளதாக முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

2026 ஆம் ஆண்டில் மட்டும் இதுவரை 12 கைது சம்பவங்கள் நடந்துள்ளன. 

தற்போது 58 மீனவர்கள் இலங்கையில் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

266 படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

எனவே, கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கு இலங்கை அரசை வலியுறுத்துமாறு இந்தியப் பிரதமரிடம் தமிழக முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara