May 28, 2026 - 03:57 PM -
0
ரவி மோகனுக்கும் ஆர்த்திக்கும் கடந்த 2009 இல் திருமணமாகி இரு மகன்களை பெற்று நல்லபடியாக வாழ்ந்து வந்தனர். கடந்த திடீரென தன் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறி அறிக்கை வெளியிட்டார் ரவி மோகன். இதற்கு ஆர்த்தி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், ரவி மோகன், தோழி கெனிஷாவுடன் பல இடங்களுக்கு சென்று வந்தது பெரும் சர்ச்சைக்குள்ளானது.
இந்நிலையில் விவாகரத்து வழக்கு சென்று கொண்டிருக்கும் நிலையில், கெனிஷா சென்னையை விட்டும் ரவி மோகனை விட்டும் வெளியேறுவதாக கூறியிருந்தார். இதன்பின் ரவி மோகன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பல விஷயங்களை எமோஷனலாக பேசியிருர்ந்தார். தற்போது கெனிஷாவுக்கு மற்றுமொரு அடி விழுந்திருக்கிறது.
அதாவது நாடு நாடாக சென்று பாடல்கள் பாடும் கெனிஷா, துபாயில் சென்று பாடல் பாடுவதாக இருந்தார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க தனக்கு பணம் தரவில்லை என்று தனியார் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டி வீடியோ வெளியிட்டார். அதனை அவரது தோழி ஒருவரும் ஷேர் செய்திருந்தார்.
இதனை கவனித்த அந்த நிறுவனம், கெனிஷாவுக்கு பணம் கொடுத்துவிட்டோம் என்று சொல்லி அவர் மீதும், அவரது தோழி மீதும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இரண்டு பேருக்கும் ஐக்கிய அரசு அமீரக இணைய குற்றச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என்ற அறிவித்துள்ளது. மேலும் இந்திய மதிப்பில் ஒரு லட்சத்து 29 ஆயிரம் ரூபாயை அபராதமாக செலுத்தவும் உத்தரவிட்டிருக்கிறார்கள்.

