May 28, 2026 - 05:04 PM -
0
வில் அம்பு படத்தின் இயக்குனர் ரமேஷ் சுப்ரமணியம் தனது 49 வயதில் இன்று (28) காலமானார். இவரின் மறைவு குறித்த செய்தி திரைத்துறையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவரது இறுதி சடங்குகள் கோவை மாவட்டம் சுகுனாபுரத்தில் நாளை (29) நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ரமேஷ் சுப்ரமணியத்திற்கு எலும்பு புற்றுநோய் பாதிப்பு இருந்துள்ளது. இதற்காக அவர் வைத்தியசாலையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல இயக்குனர் சுசீந்திரனின் உதவி இயக்குனராக ரமேஷ் பணியாற்றி வந்தார்.
அவர் இயக்கிய வில் அம்பு படம் 2016 இல் வெளிவந்தது. இதில் ஹரிஷ் கல்யான், ஸ்ரீ, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தை சுசீந்திரன் தயாரித்திருந்தார்.
இந்த நிலையில் ரமேஷ் சுப்ரமணியத்தின் மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

