Header Logo

சினிமா
பிரபல இயக்குநர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

May 29, 2026 - 02:01 PM -

0

பிரபல இயக்குநர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!

பிரபல பெங்காலி திரைப்பட இயக்குனர் அனிக் தத்தா தனது 66 வயதில் கொல்கத்தாவிலுள்ள அவர் தங்கி இருந்த ஆறு மாடி குடியிருப்பின் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். 

டோவர் லேனில் வசித்து வந்த அனிக் தத்தா, நேற்று (29) மதியம் 1 மணியளவில் அவரது மனைவிக்குச் சொந்தமான பிளாட் உள்ள ஹிந்துஸ்தான் பார்க் கட்டிடத்திற்கு வந்துள்ளார். 

ஆனால், அவர் தனது மனைவியைச் சந்திக்கச் செல்லாமல் நேரடியாக மொட்டை மாடிக்குச் சென்றுள்ளார். மதியம் 1:05 மணியளவில் அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

உடனே அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். 

அவர் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மொட்டை மாடியில் இருந்து தற்கொலை குறிப்பு மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதில் தனது மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை என்று எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்தை பொலிஸார் தற்போது சரிபார்த்து வருகின்றனர். 

அனிக் தத்தா, இதுவரை 7 திரைப்படங்களை இயக்கியுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான இவரது முதல் நகைச்சுவைத் திரைப்படமான 'பூட்டர் பவிஷ்யத்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இவரது படங்களில் வரும் அரசியல் நையாண்டிகள் பிரசித்தி பெற்றவை. 

அவரின் மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


MOST READ

காணொளி
காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி 5 ஆவது வாரமாக போராட்டம்!

title