Header Logo

செய்திகள்
வாகன விபத்துக்களால் இரண்டு நாட்களில் 24 பேர் பலி

Jun 1, 2026 - 10:44 PM -

0

வாகன விபத்துக்களால் இரண்டு நாட்களில் 24 பேர் பலி

கடந்த 29 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் இடம்பெற்ற 19 வீதி விபத்துகளில் 24 பேர் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்துப் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். 

பொலிஸ் ஊடகப் பிரிவில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார். 

அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த போக்குவரத்துப் கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் அதிபர் டப்ளியூ.பி.ஜே. சேனாதீர, 

"கடந்த 2 நாட்களில், அதாவது 5.29 மற்றும் 5.30 ஆகிய இரு வெசாக் தினங்களில் 19 வீதி விபத்துகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 29 பாரதூரமான விபத்துகளும், 96 சிறு விபத்துகளும், 19 சேதங்களை ஏற்படுத்திய விபத்துகளும் பதிவாகியுள்ளன. இந்த வீதி விபத்துகளுக்கு உள்ளான வாகனங்களை எடுத்துக்கொண்டால் 15 மோட்டார் சைக்கிள்கள், 03 முச்சக்கரவண்டிகள், இரண்டு லொறிகள் உள்ளடங்குகின்றன. 

அத்துடன் இரண்டு தனியார் பேருந்துகள், 1 கெப் வாகனமும் இந்த விபத்துகளுடன் தொடர்புபட்டுள்ளன. விபத்துகளில் 13 பாதசாரிகளும், 7 மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களும், மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்த ஒருவரும், ஒரு மிதிவண்டி ஓட்டுநரும் உயிரிழந்துள்ளனர். மேலும் ஒரு சாரதி, ஒரு பயணி என ஒட்டுமொத்தமாக 24 பேர் உயிரிழந்துள்ளனர்" என்றார்.


MOST READ

காணொளி
செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

மனோ கணேசன் அதிரடி!

மனோ கணேசன் அதிரடி!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

மக்களின் காணிகளை பார்வையிட்ட பிரதி பாதுகாப்பு அமைச்சர்!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

குருக்கள்மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி வழக்கு!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

மரண தண்டனை கைதி ஒருவர் தற்கொலை!

title