Header Logo
SLIC
பல்சுவை
பஜ்ஜி, வடை போன்றவற்றை நியூஸ் பேப்பரில் விற்பனை செய்யக்கூடாது!

Jun 8, 2026 - 12:17 PM

பஜ்ஜி, வடை போன்றவற்றை நியூஸ் பேப்பரில் விற்பனை செய்யக்கூடாது!
Mobitel Inner 1278
EDEX Inner

இந்தியர்களின் பிரியமான ஸ்நாக்ஸ் என்றால் அது வடை, பஜ்ஜிதான். கடையில் சுடச்சுட வாங்கி அப்படியே ஒரு பேப்பரில் மடித்து எண்ணெய்யை வெளியேற்றிவிட்டு சாப்பிட்டால்தான் அந்த நாளே முழுமை பெறும் என சொல்லும் அளவுக்கு இங்கு வடை, பஜ்ஜி பிரியர்கள் அதிகம். ஆனால் அப்படியானவர்களுக்கு ஒரு ஷாக் இந்திய அரசின் உத்தரவு தற்போது உணவு பாதுகாப்பு ஆணையத்தில் இருந்து வந்துள்ளது. 

“இந்தியா முழுவதும் உணவு பொருட்களை பார்சல் செய்வதற்கு செய்தித்தாளை பயன்படுத்த வேண்டாம்” என உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஏற்கனவே இந்த உத்தரவு நடைமுறையில் இருந்தாலும் அதனை உணவு கடை உரிமையாளர்கள் மற்றும் டீ கடை வைத்துள்ளவர்கள் அதனை முறையாக பின்பற்றுவதில்லை என புகார்கள் எழுந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ள எச்சரிக்கையில், “செய்தித்தாளில் பயன்படுத்தப்படும் அச்சு மையில் பல்வேறு தீங்கு விளைவிக்கும் வண்ணங்கள், நிறமிகள், ரசாயனங்கள் மற்றும் ஈயம் போன்ற கன உலோகங்கள் உள்ளன. பொறித்த உணவுகளை செய்தித்தாள்களில் வைத்து பரிமாறுவது அல்லது சுற்றுவதென்பது வெளியிலிருந்து பார்க்க பாதிப்பு இல்லாதது போல் தோன்றலாம். ஆனால் அவை கடுமையான உடல்நல அபாயங்களை ஏற்படுத்தும் தன்மை கொண்டது” என தெரிவித்துள்ளது. 

தவிர, செய்தித்தாள்கள் அச்சிடும்போதும், கொண்டு செல்லப்படும்போதும், விநியோகிக்கப்படும்போதும் பெரும்பாலும் தூசி, அழுக்கு மற்றும் சுகாதாரமற்ற கையாளுதலுக்கு உள்ளாகின்றன. இதனால், அவை உணவை அசுத்தப்படுத்தி, உணவுவழி நோய்களின் அபாயத்தை அதிகரிக்கக்கூடிய, நோயை உண்டாக்கும் நுண்ணுயிரிகளைக் கடத்தும் சாத்தியமுள்ள ஊடகங்களாக மாறுகின்றன. 

மட்டுமன்றி செய்தித்தாள் மையில் உள்ள வேதிப்பொருட்கள் உடலுக்குள் சென்றால், செரிமானப் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம்கூட உள்ளதென எச்சரிக்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். 

எனவேதான் இனி பஜ்ஜி, வடை, போண்டா போன்ற உணவுப் பொருட்களை செய்தித்தாள்களில் பார்சல் செய்ய வேண்டாமென, உணவு வியாபாரிகளுக்கு உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இவற்றுக்கு பதிலாக வாழை இலை, பட்டர் பேப்பர், எவர்சில்வர் / கண்ணாடி பாத்திரங்களில் உணவை வைக்கலாம்.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278