Header Logo
Mogo Academy

செய்திகள்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தடைபடக்கூடாது

Jun 8, 2026 - 01:29 PM -

0

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தடைபடக்கூடாது
Mobitel inner

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்படக்கூடாது என கத்தோலிக்க திருச்சபையின் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணை தொடர்பில் இன்று (8) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

சுரேஷ் சலே தம்மீது அவதூறு வழக்கை தொடர்ந்துள்ள நிலையில், அதனை இல்லாது செய்வதற்காகவே இந்த கைது இடம்பெற்றுள்ளதாக சிலர் போலியான வகையில் சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றார்கள். 

அது தொடர்பில் விளக்கமளிக்க வேண்டிய தேவை உள்ளது. 

தாம் வௌியிட்ட கருத்து ஒன்று தொடர்பில், அவர் தமக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருப்பது உண்மையாகும். 

அந்த வழக்கை இருதரப்பின் இணக்கப்பாடுகளுக்கு அமைய முடிவுக்கு கொண்டு வர முடியும் என சலே தம்மிடம் கோரியிருந்தார். 

அந்த சந்தர்ப்பத்தில் எனது சட்டத்தரணிகள் குழாமினரும் அருகில் இருந்தனர். 

ஆனால் அவ்வாறான தேவை ஒன்று இருக்கவில்லை. நான் வௌியிட்ட கருத்துக்கள் சரியானவை என நம்புகின்றேன். அதனால் இந்த வழக்கை தொடர்ந்தும் முன்கொண்டு செல்வோம் எனக் கூறியிருந்தேன். 

எவ்வாறாயினும் அவர் தற்போது கைது செய்யப்பட்டமையான உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணை அடிப்படையிலேயாகும். 

அந்த விசாரணைகள் அனைத்தும் தடையின்றி நடைபெற வேண்டும். 

குறித்த தாக்குதலின் பின்னணியில் ஒரு அரசியல் சூழ்ச்சி உள்ளதா என்பதை அறிந்துக் கொள்ள பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிமை உண்டு. 

எனவே அந்த விசாரணைகள் எந்தவொரு அழுத்தங்களாலும் இடைநிறுத்தப்படக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara