Header Logo
Mogo Academy

சினிமா
சஞ்சிதா - சுஷாந்த் சிங் மரணங்களுக்கு இடையே தொடர்பா?

Jun 16, 2026 - 11:58 AM -

0

சஞ்சிதா - சுஷாந்த் சிங் மரணங்களுக்கு இடையே தொடர்பா?
Mobitel inner

இந்தியில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நடிகை சஞ்சிதா உகாலே சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என இரண்டிலும் மிகவும் பிரபலமானவர். வெப் தொடர்கள் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்து வந்துள்ளார். பாலிவுட் திரையுலகில் நடிகர் விக்கி கவுஷால் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற சாவா திரைப்படத்தில் நடிகை சஞ்சிதா உகாலே நடித்திருந்தார். 

இந்த நிலையில், மும்பையில் உள்ள தனது வீட்டில் நடிகை சஞ்சிதா சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். தந்தை மற்றும் சகோதரியுடன் வசித்து வந்த இவர், வீட்டில் ஆள் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர். தற்போது இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஆனால், நடிகை சஞ்சிதா உகாலே தற்கொலை செய்துகொண்டதற்கான காரணம் இதுவரை எதுவும் வெளிவரவில்லை. 

நடிகை சஞ்சிதாவின் மரணம் அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்கள் தங்களது இரங்கலை சமூக வலைத்தளங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். சஞ்சிதா தற்கொலை செய்துகொண்ட தினம் கடந்த ஜூன் 14 ஆம் திகதி 2026. இதே நாளில் 6 ஆண்டுகளுக்கு முன் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்துகொண்டார். 

இந்த இரண்டு சம்பவங்களும் ஒரே தேதியில் நடந்துள்ள நிலையில், சஞ்சிதா உகாலேவின் சகோதரர் ஆகாஷ், இந்த இரண்டு சம்பவங்களையும் தொடர்புபடுத்தி பேசியுள்ளார். அதில், "சுஷாந்த் சிங் ராஜ்புட் 2020 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் திகதி அங்கு தற்கொலை செய்துகொண்டார். 

ஏன்? ஏனென்றால், பாலிவுட் அவர் மீது மிகுந்த அழுத்தத்தை கொடுத்தது. அந்த அழுத்தத்தின் காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டார். அதேபோல் தான் நேற்று என் சகோதரியும் இதே காரணத்திற்காக தற்கொலை செய்துகொண்டார்" என கூறியுள்ளார்.


MOST READ

காணொளி
செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியில் போராட்டக்காரர்களை சந்தித்த ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

செம்மணியை பார்வையிட்ட ஐரோப்பிய ஒன்றிய சிறப்புப் பிரதிநிதிகள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 39 ஆம் நாள்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

கிளிநொச்சி ஊழல்களால் தான் நிறைந்துள்ள மாவட்டம்!

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

தங்கதுரை, குட்டிமணி சிலையமைப்பிற்கு ஏன் தடை?

காணி வழங்​கக் கோரிக்கை!

காணி வழங்​கக் கோரிக்கை!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

பாராளுமன்றில் சாணக்கியன் அதிரடி!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

மூன்றாம் கட்டத்தின் 38 ஆம் நாள் அகழ்வு பணிகள்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

Mobitel Upahara