Header Logo

செய்திகள்
முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து விழுந்து விபத்து

Jun 17, 2026 - 09:54 AM -

0

முச்சக்கரவண்டி மீது மரம் முறிந்து விழுந்து விபத்து

 கண்டி - கலஹா பிரதான வீதியின், கலஹாகுரூப் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்றின் மீது பைனஸ் மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.


கலஹாவில் உள்ள சண்முகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தனது மகனை, தந்தை ஒருவர் முச்சக்கரவண்டியில் ஏற்றி வீட்டிற்கு அழைத்துச் செல்லும் போதே இந்த பாரிய பைனஸ் மரம் முச்சக்கரவண்டியின் மீது முறிந்து விழுந்துள்ளது.


எனினும், இதில் பயணித்த தந்தையும் மகனும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.


இந்த விபத்தினால் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்னரும் இப்பிரதான வீதியில் பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்த சம்பவமொன்று பதிவாகியிருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.


எனவே, பிரதான வீதிக்கு அருகில் ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை உடனடியாக அகற்றித் தருமாறு உரிய அதிகாரிகளிடம் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


இச்சம்பவம் குறித்து கலஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!