Header Logo

செய்திகள்
கூடுதல் நேரத்தில் கோல் அடித்தால் கிடைத்த வெற்றி!

Jun 18, 2026 - 07:12 AM -

0

 கூடுதல் நேரத்தில் கோல் அடித்தால் கிடைத்த வெற்றி!

23 வது உலக கிண்ண கால்பந்து தொடர் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் நடைபெற்று வருகின்றன. 

இதில் டொரண்டோ மைதானத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நடைபெற்ற 'எல்' பிரிவு லீக் போட்டியில், கானா மற்றும் பனாமா அணிகள் மோதின. 

இந்த போட்டியின் முதல் பாதி வரை எந்த அணியும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. போட்டியில் யாருக்கும் சிவப்பு அட்டை காண்பிக்கப்படவில்லை. ஆனால், இரு அணிகளுக்கும் தலா ஒரு மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. இதனால், வீரர்கள் சற்று எச்சரிக்கையுடன் விளையாடினர். பனாமா அணிக்கு கோல் அடிக்கும் பெரிய வாய்ப்பு ஒன்று கிடைத்தும் அணி கோல் அடிக்கவில்லை. 

போட்டி முடிவு வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால், 90 நிமிடங்கள் முடிந்த பின்னர் கூடுதல் நேரம் அளிக்கப்பட்டது. இதனை கானா அணி பயன்படுத்தி கொண்டது. 

அந்த அணியின் காலிப் ஐரென்கி கூடுதல் நேரத்தின் 5 வது நிமிடத்தில் 1 கோல் அடித்து அணியை முன்னிலைக்கு கொண்டு சென்றார். 

இந்த போட்டியில், கூடுதல் நேரத்தின்போது, கோல் அடிக்க முயன்ற பனாமா அணி வீரர், கானா கோல் கீப்பரின் மீது மிதித்ததில் 2 வது முறையாக மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. போட்டி முடிவில், 1 - 0 என்ற கோல் கணக்கில் பனாமா அணியை வீழ்த்தி கானா அணி வெற்றி பெற்றது.


MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!