Header Logo

செய்திகள்
பதுளை - நானுஓயா ரயில் சேவை நேர அட்டவணை வௌியீடு

Jun 18, 2026 - 01:19 PM -

0

பதுளை - நானுஓயா ரயில் சேவை நேர அட்டவணை வௌியீடு

பதுளை மற்றும் நானுஓயா இடையிலான ரயில் சேவை எதிர்வரும் 20ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கடந்த ஆண்டு நாட்டில் ஏற்பட்ட 'டித்வா' சூறாவளி நிலைமையின் போது, நானுஓயா மற்றும் அம்பேவெல ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. 

ரயில் பாதையின் புனரமைப்புப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளதாகவும், நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் நேற்று (17) சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தனியார் துறையுடன் இணைந்து, ரயில்வே திணைக்களத்தின் மேற்பார்வையின் கீழ் நானுஓயா மற்றும் அம்பேவெல இடையே நிலச்சரிவுக்குள்ளான ரயில் பாதையை வழமைக்குக் கொண்டுவந்துள்ளது. 

இதற்கமைய, இதுவரையில் அம்பேவெல மற்றும் பதுளைக்கு இடையில் மாத்திரம் பயணித்த பயணிகள் ரயில் சேவைகள், இம்மாதம் 20ஆம் திகதி முதல் நானுஓயாவில் இருந்து இயக்கப்படும். 

அதேவேளை, கொட்டகலை மற்றும் தலவாக்கலை ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியின் புனரமைப்புப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கிரேட்வெஸ்டர்ன் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்ட ரயில் பாதையை வரைபடமாக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 


MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!