Header Logo

செய்திகள்
மீண்டும் சந்தேகநபராகும் துமிந்த திஸாநாயக்க!

Jun 20, 2026 - 11:05 AM -

0

மீண்டும் சந்தேகநபராகும் துமிந்த திஸாநாயக்க!

தங்க முலாம் பூசப்பட்ட T-56 ரக துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் ஒரு சந்தேகநபராகப் பெயரிட்டு, கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாக அழைப்பாணை விடுக்குமாறு கல்கிஸ்சை நீதவான் நேற்று (19) உத்தரவிட்டுள்ளார். 

ஹவ்லொக் வீடமைப்புத் தொகுதியில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பெண் ஒருவரின் பையிலிருந்து தங்க முலாம் பூசப்பட்ட T-56 துப்பாக்கியைக் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கிலிருந்து கடந்த வருடத்தின் ஜூலை மாதம் 29 ஆம் திகதி துமிந்த திஸாநாயக்க விடுவிக்கப்பட்டிருந்தார். 

இருப்பினும், பயங்கரவாத ஒழிப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் உத்தியோகத்தர்கள் இந்தத் துப்பாக்கி தொடர்பாக மேற்கொண்ட மேலதிக விசாரணைகளின் அறிக்கைகளுக்கு அமைய, துமிந்த திஸாநாயக்கவை ஒரு சந்தேகநபராகப் பெயரிட முடியும் என சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்த நிலையிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

இன்று மேலும் 7 என்புக்கூடுகள் அடையாளம்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

நீதி அமைச்சரின் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!

கதிர்காம பாதயாத்திரை மட்டக்களப்பை வந்தடைந்தது!