Header Logo

விளையாட்டு
கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 கணக்கில் சுவிட்சர்லாந்து வெற்றி!

Jun 25, 2026 - 06:35 AM -

0

கனடாவுக்கு எதிரான ஆட்டத்தில் 2-1 கணக்கில் சுவிட்சர்லாந்து வெற்றி!

உலகக் கிண்ண கால்பந்து தொடரின் க்ரூப் பி-யில் இடம்பெற்றுள்ள சுவிட்சர்லாந்து மற்றும் கனடா அணிகள் மோதின. 

பி.சி. பிளேஸ் வேன்கோவரில் நடைபெற்ற இந்தப் போட்டி தொடக்கம் முதலே விறுவிறுப்பாக அமைந்தது. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் கோல் அடிப்பதற்கு முனைப்பு காட்டினர். 

எனினும், ஆட்டத்தின் முதல் பாதி வரை இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கியதும் சுவிட்சர்லாந்து அணியின் ரூபென் வர்கஸ் 46 ஆவது நிமிடத்தில் கோல் அடிக்க சுவிட்சர்லாந்து அணி 1-0 என முன்னிலை பெற்றது. 

தொடர்ந்து 56 ஆவது நிமிடத்தில் ஜோஹன் மன்சாம்பி கோல் அடிக்க சுவிட்சர்லாந்து அணி 2-0 என முன்னிலை பெற்றது. தொடர்ந்து 76 ஆவது நிமிடத்தில் கனடா அணியின் வீரர் பிராமிஸ் டேவிட் தனது அணிக்காக கோல் அடித்தார். 

ஆட்டத்தின் இறுதி வரை இரு அணிகளாலும் கோல் கணக்கை மாற்ற முடியவில்லை. இதனால் சுவிட்சர்லாந்து அணி 2-1 கணக்கில் வெற்றி பெற்றது.


MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!