Jun 25, 2026 - 11:29 AM -
0
காய்கறிகள் பழங்கள் தவிர வீட்டில் மீந்து போன சாப்பாடுகளையும் வைக்கிறோம். அந்த வகையில் பிரிட்ஜில் பிரெட் அல்லது ரொட்டிகளை வைக்கலாமா? அப்படி வைத்தால் அதை சாப்பிடலாமா?
தற்போதைய காலத்தில் ஃப்ரிட்ஜ் இல்லாத வீடுகளே இருப்பதில்லை. இது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக மாறிவிட்டது. ஃப்ரிட்ஜில், இட்லி மாவு, காய்கறிகள் பழங்கள் தவிர வீட்டில் மீந்து போன சாப்பாடுகளையும் வைக்கிறோம். அந்த வகையில் ஃப்ரிட்ஜில் பிரெட் அல்லது ரொட்டிகளை வைக்கலாமா? அப்படி வைத்தால் அதை சாப்பிடலாமா? என்பதை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மேற்கத்திய நாடுகளில் பிரெட்டை சேமிப்பதற்காக சமையலறையில் அதற்கு என்ன தனி பெட்டி ஒன்றை வைத்திருந்தார்கள். ஆனால், இப்போது காலம் மாற மாற பெரும்பாலான மக்கள் ரொட்டியை ஃப்ரிட்ஜில் சேமிக்க விரும்புகிறார்கள். இது சமையலறை இடத்தை மிச்சப்படுத்தினாலும், இப்படி செய்வது ஆரோக்கியத்திற்கு நல்லதா? என்று பலர் கேள்வி எழுந்துள்ளது.
உண்மையில் பிரட்டை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிட்டால் அது உடல் ஆரோக்கியத்தில் எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. ஆனால் ஃப்ரிட்ஜில் குளிர் வெப்பநிலை ரொட்டியில் உள்ள மாவுச்சத்தை மீண்டும் படிகமாக்கும். இதனால் பிரெட் பழைய சுவையை இழக்கிறது.
வீட்டில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை அறையில் வெப்பநிலையில் வைத்திருப்பது கூட நன்றாக இருக்கும். அப்படி அரை வெப்பநிலையில் மூன்று அல்லது ஐந்து நாட்களுக்குள் வைத்து பயன்படுத்தலாம் மற்றும் நல்ல தரமாகவும் இருக்கும்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில் வணிக ரீதியாக ரொட்டிகள் தயாரிக்கப்படுவதால், அவற்றை 5 அல்லது 7 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும் என்று காலாவதி தேதியுடன் வருகிறது. ஒருவேளை நீங்கள் அதை இன்னும் சிறிது நாள் வைத்து சாப்பிட விரும்பினால், அதை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடலாம். இது ரொட்டியை புத்துணர்ச்சியுடன் நீண்ட நேரம் வைத்திருக்க உதவுகிறது.
ரொட்டியை காற்று போகாத ஒரு கண்ணாடி டப்பாவில் வைத்து சேமிக்கலாம். பிரெட்டை பிளாஸ்டிக் பையில் போட்டு ஃப்ரீசரில் வைக்கலாம். இதன் மூலம் காற்று அல்லது ஈரப்பதம் உள்ளே நுழைவது முற்றிலுமாக தடுக்கப்படும். மற்றொரு வழி, பிரெட்டை பிளாஸ்டிக் கவரில் நன்றாக சுத்தி அதை அலுமினிய தாளால் மூடி பிரிட்ஜில் வைக்கலாம். இதனால் ரொட்டி புத்துணர்ச்சியாகவும், நீண்ட நாளாகவும் இருக்கும்.குறிப்பிட்ட சில மாதங்கள் வரை வைத்து சாப்பிட்டலாம்.

