Header Logo

வடக்கு
வவுனியாவில் 21.6 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Jun 26, 2026 - 09:56 AM -

0

வவுனியாவில் 21.6 கிலோ கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

வவுனியாவில் சுமார் 1 கோடி ரூபா மதிப்பிடப்பட்ட 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

இந்த கைது நடவடிக்கை நேற்று (25) வவுனியா லக்சபானா வீதிக்கு அண்மையில் இடம்பெற்றது. 

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி காரில் கொண்டு வரப்பட்ட கேரள கஞ்சா, மற்றொரு முச்சக்கரவண்டிக்கு மாற்றப்பட்டுக் கொண்டிருந்த வேளையில் பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையை மேற்கொண்டனர். 

இதன்போது கஞ்சாவை உடமையில் வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பொதி செய்யப்பட்டிருந்த 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய கார் மற்றும் முச்சக்கரவண்டியும் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. 

இந்த நடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஆர். எம். யே. எஸ். ரத்னமலல தலைமையில், குற்றத்தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி கே. ஆர். இலங்கசிங்க உள்ளிட்ட பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. 

மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி சுமார் 1 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தடுப்புக் காவல் உத்தரவின் கீழ் மேலதிக விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!