Header Logo

செய்திகள்
50,000 ஐக் கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

Jun 26, 2026 - 09:03 PM -

0

50,000 ஐக் கடந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை

நாட்டில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 50,000 ஐக் கடந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் தகவல்களின்படி, டெங்கு நோயினால் இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த ஆண்டுகளை விட இம்முறை டெங்கு நோய் தீவிரமாகப் பரவி வருவதால், பல வைத்தியசாலைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை இடவசதியைத் தாண்டி அதிகரித்துள்ளதுடன், நாட்டின் 14 மாவட்டங்கள் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளன. 

இந்தச் சூழலில், டெங்கு அபாயம் அதிகம் உள்ள 600 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி ஆரம்பிக்கப்பட்ட மூன்று நாள் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை, இன்று (26) மூன்றாம் நாளாகவும் முன்னெடுக்கப்பட்டது. 

இதற்கிடையில், டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இம்முறை பொசன் பண்டிகை கால தானசாலைகளுக்கு அனுமதி வழங்கும்போது விசேட நிபந்தனைகளை விதிக்கவும் சுகாதாரத் தரப்பினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!