Header Logo

செய்திகள்
ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் கைது!

Jun 26, 2026 - 10:53 PM -

0

ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஒருவர் கைது!

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி ஒருவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதற்காக, வேறொருவரின் பெயரில் போலி கடவுச்சீட்டு ஒன்றைத் தயாரித்த குற்றச்சாட்டில் சந்தேகநபர் ஒருவர் இன்று (26) பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார். 

மத்திய குற்றவியல் பணியகத்தின் கொலை மற்றும் திட்டமிட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமையவே இவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்டவர் 41 வயதுடைய, கண்டி பகுதியைச் சேர்ந்த, பாராளுமன்றம் மற்றும் அமைச்சரவை பிரிவின் ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஆவார். 

சந்தேகநபர் இதற்கு முன்னர் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் வெளிநாட்டுத் தூதுக்குழுப் பிரிவின் பிரதிப் கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றிய காலத்திலேயே இந்தக் குற்றத்தைச் செய்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

குற்றத்தடுப்பு, போக்குவரத்து, சிறுவர் மற்றும் பெண்கள் துஷ்பிரயோக தடுப்புப் பிரிவின் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரன்மால் கொடித்துவக்கு, மத்திய குற்றவியல் பணியகத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடித்துவக்கு மற்றும் மத்திய குற்றவியல் பணியகத்தின் பணிப்பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கமல் ஆரியவன்ச ஆகியோரின் மேற்பார்வையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சம்பவம் குறித்து மத்திய குற்றவியல் பணியகம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.


MOST READ

காணொளி
தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

தேர்தலுக்கு அஞ்சினால் ஆட்சி நீடிக்காது - சுமந்திரன்

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!